Saturday, April 3, 2010

சிறீலங்கா “அம்சா”வின் சாயலில் இந்தியாவில் “அ.மார்க்ஸ்”

சிறீலங்கா "அம்சா"வின் சாயலில் இந்தியாவில் "அ.மார்க்ஸ்"

மதுரையில் இன்று 3-4-10, இலங்கை சென்றுவந்த "அறிவுஜீவி"(!) திரு.அ.மார்க்ஸ் பேசுவதாக சுவரொட்டி கண்டு,நிகழ்ச்சிக்கு சென்றேன்.சுமார் நூறு பேர் அமரும் அரங்கம்.அதில் சில காலியாக இருந்தன.தலைமை தாங்கியவர் வழக்கறிஞர் ரஜினி எனும் மனிதஉரிமைப் போராளி!(இவரின் உண்மை முகத்தை அறிவதற்கும் இந்த நிகழ்ச்சி உதவியது) மேலும் »

 

 

கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டவர்கள் உறவினருடன் தொடர்பு

சோமாலிய கடற்கொள்ளையர்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மாலுமிகளின் இரண்டாவது அணியைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் தமது உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாட கடற்கொள்ளையர்களினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

மாலைதீவில் இலங்கை மீனவர்கள் கைது

மாலைதீவு கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்த இரு படகுகள் அந்நாட்டு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் »

தேர்தல் என்ற போர்வையில் முகமூடி அணிந்த சிலர் நடமாடுகின்றனர் – மகிந்த தெரிவிப்பு

தேர்தல் என்ற போர்வையில் முகமூடிகளை அணிந்த சிலர் ஜனநாயகம் மற்றும் பெண்களின் உரிமைகள் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து மக்கள் மத்தியில் இன்று உலாவருவதாக சிறிலங்காவின் அதிபர்  மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொறட்டுவ பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் »

இந்திய அரசால் 48 இலங்கை மீனவர்கள் விடுதலை

இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த மேலும; 48 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை சிறிலங்காவுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது. மேலும் »

1ம் ஆண்டு வீரவணக்கம் ஆனந்தபுரம் பெரும் சமர்

வன்னியில் போர் உக்கிரமம் பெற்ற காலப்பகுதிகள் ஒவ்வொரு நாளும் மக்கள் படுகொலைகளும் போராளிகளின் வீரச்சாவும் அன்று நடந்தேறிக்கொண்டிருந்தன. இவை தமிழ் மண்ணின் வரலாறுகளாக அன்று காணப்பட்டன. மேலும் »

தமிழ் இனத்தின் இறைமையும் நாடாளுமன்றத் தேர்தலும் – வேல்ஸிலிருந்து அருஷ்

இலங்கையில் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் பரபரப்புக்களில் இலங்கை மக்கள் மூழ்கியுள்ளனர். இந்தத் தேர்தலை பொறுத்தவரையில் அரச தரப்புக்கும், தென்னிலங்கையின் பிரதான எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாரிய போட்டி நிலவி வருகின்றது. ஆனால் இந்த இரு கட்சிகளில் எது வெற்றிபெற்றாலும் தென்னிலங்கை மக்களை அது பாதிக்கப்போவதில்லை. மேலும் »

உறுதியான தமிழ்த் தேசியத் தலைமையை தெரிவு செய்யும் தேர்தல் களம் -இதயச்சந்திரன்

ஒரு குறித்த நிலப் பரப்பின் மீது தனக்கு மேல் வேறொரு மேலாதிக்கமும் இன்றி, உச்ச ஆளுமையை கொண்டிருப்பதே இறைமை  ஆகும். தமிழ் பேசும் மக்கள், தமது பூர்வீக தாயகத்தை முழுமையாக ஆளுகின்ற தார்மிக உரித்துடையவர்கள் என்பதே, தமிழ் இறைமை பற்றிய விளக்கமாகும். மேலும் »

சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள் – பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு

"தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்" சார்பாக சைக்கிள் சின்னம் என அடையாளப்படுத்தப்பட்டு போட்டியிடும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. செல்வராசா கஜேந்திரன், பொன்னம்பலம் கஜேந்திரகுமார், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் எமது அடிப்படைக்கொள்கையான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்றவற்றை இலட்சியமாகக் கொண்டு அன்று தொட்டு இன்று வரை எமது தேசத்திற்காக குரல் கொடுத்து வருகின்றார்கள். மேலும் »

"தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள் – பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு

"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்து தேர்தலில் களமிறங்கியுள்ள சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என, பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் »

நிலமும், புலமும் ஓரே இலட்சிய பாதையில் சைக்கிள் சின்னத்தில் பயணிப்போம் – டென்மார்க் தமிழர் பேரவையின் அறிக்கை

முள்ளிவாய்க்காலுடன் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை தொடரமாட்டார்கள் என சிறிலங்கா அரசும் சிங்கள இனமும் நம்புவதாகவே தற்போதய இலங்கைத்தீவின் அரசியல் நிலைப்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. தமிழ் மக்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு தனிச்சிங்கள அடையாளங்கள் தமிழர் தேசத்தில் நிறுவப்பட்டுவருகின்றன. மேலும் »

ஒரு அணியாக செயற்படுமாறு தமிழ் தேசிய கட்சிகளுக்கு உலகத்தமிழர் பேரவை இறுதி நேர வேண்டுதல்!

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக திடசங்கற்பம் பூண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஒரு அணியாக செயற்படுமாறு இறுதிநேர அழைப்பாக பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் கேட்டுள்ளார். மேலும் »

யாழில் தமிழ் மக்களைத் திட்டிய மகிந்த ராசபக்சே

ஆம் நாங்கள் சிங்களம். நாடும் சிங்களம்.. அதனால் கேட்டுக்கொண்டு இரு, தமிழா. தலைதெறித்து நடந்துகொள்ளாமல்….! கேட்டுக்கொண்டு இருக்க முடியாவிட்டால் போ என இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழ் மக்களைப் பார்த்து பகிரங்கமாக திட்டியுள்ளார். மேலும் »

புரியாத இந்திய தேசியம் – இளமாறன்

சில மாதங்களுக்கு முன்னால் தமிழகத்தின் எல்லையை கடந்து இந்தியா இருக்கிறதா என பார்க்கப்போகிறேன் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்து, அதற்கான ஒரு இயக்கத்தை நடத்தினார். ஆனால் அவர் தமிழ்நாட்டு எல்லைக்குள்ளாக நிறுத்தி வைக்கப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டார். ஒன்று புரிந்தது, கர்நாடகா இந்தியாவிற்குள் இருக்கிறதா? இந்தியா  தமிழ்நாட்டிற்குள் இருக்கிறதா? மேலும் »

தமிழக காவல்துறையின் கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் வாக்குமூலம்

தமிழக காவல்துறையினரின் பாலியல் பலாத்கார கொடுமையால் தீக்குளித்து உயிரிழந்த கரூம் ஈழ ஏதிலிகள் முகாம் பெண் பத்மாதேவியின் மரணவாக்கு  மூலம். மேலும் »

அமைச்சர் அமீர் அலியின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் கிழக்கு பல்கலை.விரிவுரையாளர் மகேசன் பலி

மட்டக்களப்பில் முன்னாள் அமைச்சர் அமீர் அலியின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு ஏகாம்பரம் மகேசன் என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் »

தமிழீழம் நமது வீரர்களின் கனவு – கண்மணி

அறம் சார்ந்த வீரம், அதுதான் தமிழ் தேசிய ராணுவத்தின் கட்டமைப்பு. இந்த உலகத்தில் எந்த ராணுவ வீரர்களுக்கும் இல்லாத ஒழுக்கம், தமிழ் தேசிய ராணுவத்திற்கு மட்டும்தான் உண்டு. இதற்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் கர்வப்பட்டுக் கொள்ளலாம். தமிழ் தேசிய ராணுவத்தை எமது தேசிய தலைவர் அறம் வழி நின்று கட்டியமைத்தார். மேலும் »

சிவதீபனுக்கோர் சபதம் கேள் – வித்யாசாகர்

வன்னித் தீவின் தளபதியே
நெஞ்சுக் கூடெரித்து நஞ்சுண்ட தீபமே
ஆணையிரவில் ஆணையிட்டு -
புலிக்கொடி நாட்டிய பகிரதா – கேட்கிறதா??? மேலும் »

எம் தலைவனின் அறைகூவலில் உருவானதே நாடு கடந்த தமிழீழ அரசு

ஐனநாயக முறையில் தமிழ் மக்களுக்காக,தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட அமைப்பே இந்த  நாடுகடந்த அரசாகும். மே 2,2010 நடக்கவிருக்கும் தேர்தலில் எந்தத் தமிழ் மகனும் தனது விருப்பத்தின் பேரில் தேர்தலில் போட்டியிடலாம். விரும்பிய எந்நபரையும் ஆதரிக்கலாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் தான் தமிழீழ அரசியல் சாசனத்தை உருவாக்கப் போகின்றார்கள். மேலும் »

சுவிசில் இசைக்குயில் 2010 நிகழ்வு

தமிழர் நலன்புரிச் சங்கம் சொலத்தூண் நான்காவது தடவையாக நடாத்தும் இசைக்குயில் 2010 கர்நாடக சங்கீதநிகழ்வு தனிப்பாடல், குழுப்பாடல், பாரதியார் பாடல், இசைக்குயில் 2010 சிறப்பு விருதுக்கான பாடல் என நான்கு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்நிகழ்வில் ஏழு சங்கீதப்பபாடசாலைகளைச் சேர்ந்த 630 மாணவர்பங்குபற்றுகின்றனர். மேலும் »

No comments:

Post a Comment