Monday, November 30, 2009

உறவுகளே உங்களின் பங்களிப்பினை வழங்குங்கள்



வணக்கம் உறவுகளே

மீனகம் தளம் மீண்டெழுவதற்கு உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கவும்....

கீழுள்ள இணைப்புக்கு செல்லவும்







Sunday, November 29, 2009

Fwd: மீனகம் தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது



---------- Forwarded message ----------
From: ஆசிரியர் <editor@meenagam.org>
Date: 2009/11/29
Subject: மீனகம் தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது
To: Breaking Tamil News <currenttamilnews001@gmail.com>


தமிழீழ தமிழக புலம்பெயர்வாழ் தமிழர் செய்திகளை உறுதிப்படுத்தி விரைவாக அளித்து வந்த எமது மீனகம் தளத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததன் காரணமாக சர்வர் அளித்தவர்கள் சர்வரை மேம்படுத்தக்கூறினார்கள். அதற்குண்டான பொருளாதார வசதி எமக்கு இதுவரை கிடைக்கப்பெறாததால் எமது தளத்தினை நிறுத்திவிட்டார்கள்.

மீண்டும் எமது தளத்தினை மீளெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்குண்டான பொருளாதார வசதி கிடைக்கப்பெற்றவுடன் எமது மீனகம் தளத்தின் சேவை மீண்டும் செயல்படும்.

இது நாள் வரை ஆதரவளித்து வந்த உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
 
 
இவண்


--
மீனகம் குழுவினர்

www.meenagam.org
 
எமது மேலதிக தகவல்களை www.meenagamorg.blogspot.com இல் காணலாம்

நாம் புலம் பெயர்ந்தது அகதியாக வாழ்ந்து மடிவதற்காக இல்லை, மனதில் உறுதி வேண்டும்; தேசப் பணியாற்ற விரைந்துவா

eelam_flagசில சந்தர்ப்பங்களில் குழப்பமான சூழலில் சிக்குண்டு வாழும் நிலை எமக்கு விதிக்கப் பட்டு விடுகின்றது. எம்மை மீறிய செயல்ப்பாடுகள்… எம்மால் சுமக்க முடியாத சுமைகள் எம் மீது சுமத்தப்படும் போது அவை எம்மை திக்குமுக்காடச் செய்து விடுகின்றுது. எதையும் சமாளிக்க முடியாது என்ற ஒரு சூழலில் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றோம்.
29 November 2009

‘புதிய சூரியதேவன்’ நாடகத்தில் தளபதி ராமுக்கும், கோத்தபாயவுக்கும் சிறந்த நடிகர்கள் விருது! – சி. பாலச்சந்திரன்

eelanaadu_logo_sசூரிய தேவனின் வரவினால் சூரஜயகாந்திப் பூக்கள் மலர்ந்து சிரித்தன. சூரிய தேவனை வாழ்த்தித் துதித்தன. சூரிய தேவனே தங்களது வாழ்தலுக்கான உயிர் சக்கி எனத் தொழுதன. நண்பகல் பொழுது நெருங்க நெருங்க சூரிய தேவனின் ஒளிக் கதிர்களின் வெப்பம் அதிகரித்துச் சென்ற போதும், அதனையும் சுகமாகவே மகிழ்ந்து அனுபவித்தன சூரியகாந்திப் பூக்கள்.
29 November 2009

Saturday, November 28, 2009

மாவீரச் செல்வங்களை கொலைகாரர் என்று கூறியதன் மூலம் பேரினவாதத்தின் பிச்சைக்காரன் நீர் என்பதை மீண்டும் ஒருமுறை அறியத்தந்துவிட்டீர் – யாழிலிருந்து சனீஸ்வரன்

traitor001எமது தேசத்தின் புதல்வர்களை கொலைகாரர்கள் என்று பேசிய தேசத் துரோகி டக்கிலஸ் தேவானந்தாவுக்கு யாழிலிருந்து சனீஸ்வரன் ஒரு மடலை எழுதியுள்ளார்.
28 November 2009


--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

Friday, November 27, 2009

audio: சீமான், கொளத்தூர் மணி, தியாகி முத்துக்குமரனின் தந்தை, பத்திரிக்கையாளர் அய்யநாதன் மாவீரர் நாள் உரைகள்


மாவீரர் நாள்: காப்டன் மில்லர் நினைவரங்க திறப்பு – கொளத்தூர் மணி உரை

Posted Under: காணொளி, செய்திகள்
மீனகம்

[ஒலி] புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழக மாநிலத்தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் இன்று நடைபெற்ற காப்டன் மில்லர் நினைவரங்க திறப்பு விழா மற்றும் மாவீரர் நாள் நிகழ்வில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.

இயக்குநர் சீமானின் மாவீரர் நாள் உரை

Posted Under: காணொளி, செய்திகள்
பகலவன்

[ஓலி]இயக்குநர் சீமானின் மாவீரர் நாள் உரை

[ஒலி] மாவீரர்கள் புகழ் ஒருநாளும் மறையாது: தியாகி முத்துக்குமரனின் தந்தை

[ஓலி]தமிழின விடுதலைக்காக தமிழ்நாட்டில் தன்னுடலை தீயினில் பொசுக்கி உயிர் நீத்த தியாகி முத்துக்குமரனின் தந்தை குமரேசன் மாவீரர் நாளுக்காக மீனகம் தளத்தின் ஊடாக தமிழர்களுக்கு அளித்த உரை.

இந்திய சிங்கள கூட்டுச்சதியால் கனடாவிலிருந்து செந்தமிழன் சீமான் வெளியேற்றம்

[ஒலி] தமிழகத்தின் திரைப்படத் தயாரிப்பாளரும் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

மாவீரர் உயிரிழந்ததின் இலக்கினை நாம் அடைய வேண்டும் – பத்திரிக்கையாளர் அய்யநாதன்

[ஒலி]தமிழ் வெப்துனியா ஆசிரியரும் தமிழீழ ஆதரவாளருமான அய்யநாதன் அவர்கள் மாவீரர் நாளுக்காக மீனகம் தளத்தின் வழியாக தமிழின மக்களுக்கு அளித்த உரை.

தேசியத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து – உரை கொளத்தூர் மணி

[காணொளி] 1989 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று ஊடகங்கள் கூறிய பொழுது தமிழீழம் வந்து தலைவருடன் நிழற்படங்கள் எடுத்து தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலகத்துக்கு கூறியது போன்ற வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா…? என்று பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

தாய் மானம் காத்த மறவர்கள்..

Posted Under: காணொளி, செய்திகள்
வன்னியன்

தாய் மானம் காத்த மறவர்கள்..

[காணொளி] அவுஸ்திரேலியாவும் – தமிழீழமும்: அவுஸ்திரலியா ஊடகத்தின் ஒரு பார்வை

அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை "தமிழ் ஏதிலிகளின்" பிரச்சினை பெரிய அளவில் அரசியல் மற்றும் கொள்கை மாற்றங்களினை ஏற்படுத்தியுள்ளது.கடந்த காலங்களில் "தமிழர்களின்" பிரச்சினைகளை அவலங்களை பற்றி பேசாமல் தவிர்த்து வந்த முக்கியமான ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பேச ஆரம்பித்திருப்பது மிகப்பெரிய மாற்றம்.

மாவீரர் பாடல்கள்

Posted Under: காணொளி, செய்திகள்
சோழன்

மாவீரர் பாடல்கள்

விண்ணேறிய வீரம்

Posted Under: காணொளி, செய்திகள்
பகலவன்

விண்ணேறிய வீரம் பாடல் தொகுப்பு.




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

Thursday, November 26, 2009

தியாகி முத்துக்குமரனின் தந்தை அளித்த மாவீரர் தின செவ்வி



salute_muththukkumar[ஓலி]தமிழின விடுதலைக்காக தமிழ்நாட்டில் தன்னுடலை தீயினில் பொசுக்கி உயிர் நீத்த தியாகி முத்துக்குமரனின் தந்தை குமரேசன் மாவீரர் நாளுக்காக மீனகம் தளத்தின் ஊடாக தமிழர்களுக்கு அளித்த உரை.
27 November 2009


--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

Wednesday, November 25, 2009

இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்: புலிகளின் புதிய நம்பிக்கை

leader_manmohan'விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்' என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் 'இலங்கையில் மீண்டும் போர் மூளும் – அதுவும் இந்தியாவின் துணையோடு' என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில். இவ்வாறு தமிழகத்தின் வார சஞ்சிகையான ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது.
26 November 2009


--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

நாம் எமது தலைவனை நேசிப்பது உண்மை என்றால் போராடுவோம்

leader_gunதமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான 1976ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் அறிக்கைகள் மூலம் தமது செயல்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதை மக்கள் அறிந்திருந்தனர். மாறாக பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர் புலிகள். வெறுமனவே அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர முயற்சிக்கவில்லை புலிகள், மாறாகத் தமிழ் மக்கள் விடிவிற்காய் போராடினர்.
26 November 2009


--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

வெளிப்படையாகச் சொல்லுங்கள், ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்? – ஜெகத் கஸ்பாரும் தமிழீழமும்…

jegathகமல்ஹாசன் முதல் ரஜினி வரை நூறு பிரபலங்கள் பங்களித்திருக்கும், `ஈழம்… மௌனத்தின் வலி' என்கிற கவிதை நூல் வெளிவந்திருக்கிறது. தமிழ் மையம் இயக்குனர் பாதிரியார் ஜெகத் கஸ்பருக்குச் சொந்தமான `நல்லேர் பதிப்பகம்' சார்பில், வெளி வந்திருக்கும் அந்தக் கவிதை நூல் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
25 November 2009


--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

Tuesday, November 24, 2009

தவறிழைத்தது யார்: பிரபாகரனா? கருணாநிதியா?

karunanidhiஇலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்பட்டால் அதை ஒடுக்குவதற்காக இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பதுதான் சென்ற வாரத்தின் பில்லியன் டாலர் கேள்வி.
24 November 2009


--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கார்த்திகை 27ல் மாவீரர் நாள் உரையாற்றுவதா… இல்லை தற்போதுபோன்று ஏதுமற்ற வெறுமை நிலையினை தொடர்வதா…

  • கார்த்திகை 27ல் மாவீரர் நாள் உரையாற்றுவதா… இல்லை தற்போதுபோன்று ஏதுமற்ற வெறுமை நிலையினை தொடர்வதா…
    21/11/2009 | 6:45 am
    leader_lightதலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது [விரிவு] »




  • புரட்சியாளர் பிரபாகரனை வணிகச்சின்னமாக்காதீர்…
    19/11/2009 | 10:40 am
    leader_16102009_sவாழ்நாள் புரட்சியாளர் சேகுவேராவின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரின் மூத்த மகள் அலைடா, கியுபாவில் ஓர் அறிக்கை வெளியிட்டார். [விரிவு] »




  • அம்சாவின் கைக் கூலி – குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெய்
    19/11/2009 | 6:28 am
    P.M.Amzaதமிழ் நிலத்தை ஆண்ட இனம் மாண்டு கிடக்க….மிச்சமுள்ளோர் அடிமை வாழ்க்கையை கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அறிவிலும், புத்திக் கூர்மையிலும் சிறந்த தமிழர் மரபு, குற்ற பரம்பரையாய், நாடு கடத்தப்பட்ட மொக்கு சிங்களனிடம் வீழ்ந்து கிடக்கிறது. [விரிவு] »




  • பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமூலம் – விகடன்
    18/11/2009 | 2:53 pm
    sarath_mahindaதமிழகத்திலிருந்து வெளிவரும் விகடன் சஞ்சிகையில் வெளிவந்த "பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமூலம்" கட்டுரை மீனகம் வாசகர்களுக்காக… [விரிவு] »




  • தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் கருணாநிதி
    18/11/2009 | 12:49 pm
    karuna-karunaமுள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக  அழுவதாகப் புலம்புகிறார். [விரிவு] »




  • வீழ்ந்த ஈழம் எழும்! காலம் அதைச் சொல்லும்! – பழ.நெடுமாறன்
    16/11/2009 | 6:35 pm
    nedumaaran20092009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி நான்காம் கட்ட ஈழப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டுவிட்டதாகவும் இலங்கை அரசு பெருமிதத்துடன் அறிவித்தது. போரின் கடைசிக் கட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். [விரிவு] »





  • --
    தமிழர் ஊடகம்

    http://groups.google.com/group/currenttamilnews

    தப்புத்தாளம் போடும் கிஷோரும், சிறிகாந்தாவும்! (பூனை இல்லாத வீட்டில் எலி சன்னதம் – புலி இல்லாத நாட்டில் பூனைகள் ஓடி விளையாடுகின்றன)

    sri-kantha-and-sivanathan-kishor2பூனை இல்லாத வீட்டில் எலி சன்னதம் என்பார்கள். இப்போது புலி இல்லாத நாட்டில் பூனைகள் ஓடி விளையாடுகின்றன. அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோரும் நல்லதம்பி சிறிகாந்தாவும் அண்மைய காலங்களில் செயற்படுகின்றனர் என தமிழ் படைப்பாளிகள் கழகம் (ரொறன்ரோ) தெரிவித்துள்ளது.

    --
    தமிழர் ஊடகம்

    http://groups.google.com/group/currenttamilnews

    Monday, November 23, 2009

    தனி ஈழம் வேண்டும்; இந்தியாவுக்காக!

    tamilnadu-tamileelam"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்"- – என்று உலக இலக்கியத்தின் உச்சியில் நின்று முழங்கிய நம் வள்ளுவனின் வாயில், கியூபாவையே தூக்கிப் போடலாம். அதன் பட்டப்பெயர் உலகின் சர்க்கரைக்கிண்ணம். ஆம். உலகிலேயே அதிகம் சர்க்கரை உற்பத்தியாவது அங்கேதான்.
    23 November 2009


    --
    தமிழர் ஊடகம்

    http://groups.google.com/group/currenttamilnews

    சிரிப்புக்குள்ளாகியுள்ள செம்(மறி) மொழி மாநாடும் சிக்கலில் மாட்டியுள்ள சிவத்தம்பியும்: சங்கிலியன்

    sivathampiஈழத்தமிழினத்தின் பாரிய அழிவின் பங்காளி என்ற பட்டத்திற்கு முழுமையான உரித்துடையவர் என்று உலகத் தமிழர்களினால் சூட்டப்பட்ட தமிழ் வளர்தத (தமிழால், தனது குடும்ப அரசியல், பொருளாதாரம், முதல்வர் பதவி என்பவற்றில்| தன் நிலைய வளர்ததுக் கொண்டவர்) தமிழக முதல்வர் மு.கருணாநிதி உலகத்தமிழர் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை எப்படியாவது நடத்திவிட வேண்டுமெனப் பகீரதப் பிரயத்தனம் செய்து காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.

    23 November 2009


    --
    தமிழர் ஊடகம்

    http://groups.google.com/group/currenttamilnews

    இழப்புகளின் மீதான இவர்களின் இருப்புகள் : தமிழர்களின் எதிர்காலம் யார் கையில் ???

    question-mark-artகுளிர்காலம் ஆரம்பித்தால் பனி சூழந்த மலைகள் சுவிசின் அழகை மேலும் அழகாக்கும். இப்போது இங்கே பனிகாலம் மக்கள் போர்வைக்குள் தங்களை புதைத்துக் கொண்டு அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். சூரிச் நகரின் ஒதுக்குப்புறமான ஒரு விருந்தினர் விடுதி வழமைக்கு மாறான பரப்புடன் காணப்படுகின்றது.
    23 November 2009


    --
    தமிழர் ஊடகம்

    http://groups.google.com/group/currenttamilnews

    Sunday, November 22, 2009

    உலகிற்கு ஏற்றவாறு இலட்சியத்தை மாற்ற முடியாது


    eelam_flag33 வருடகால தேசிய இன விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய போராட்டம், முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்டதால், வரலாற்றுத் தவறாக அது மாறிவிடாது. ஒரு போராட்ட வடிவம் சிதைக்கப்பட்டதால், போராடுவதற்குக் காரணியாக அமைந்த அடிப்படைகள் அழிந்து போகாது.

    21 November 2009

    --
    தமிழர் ஊடகம்

    http://groups.google.com/group/currenttamilnews

    Saturday, November 21, 2009

    மாவீரர் தின உரை நிகழ்த்தப்போவது யார்…? – குமுதம் சஞ்சிகை

    leader_meenagamஎங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது, எப்படி? என்னும் விவரங்கள் இல்லை. ஆனால், விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து சமீபத்தில் (நவம்பர் 17) வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வமான அறிவிப்பு இது.
    21 November 2009
    karuna_rajapakse'மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது' என்று 'பூம்புகார்' திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது.
    21 November 2009
    camp_woman23வவுனியாவில் உள்ள தடுத்து முகாம்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல், சுதந்திர நடமாட்டத்திற்காக திறந்து விடப்படும் என அரசாங்கத்தின் சார்பில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இதனை சற்று முன்னர் வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் வைத்து அறிவித்துள்ளார்.
    21 November 2009
    eelam_flag01சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு நிபுணரான ரொஹான் குணரட்ண அட தெரன என்ற சிறீலங்கா ஆங்கில இணையச்செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள பிரத்தியேக பேட்டியில், சிறீலங்காவில் இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு உண்மையில் செய்யவேண்டியவற்றைச் செய்யத் தவறிவிட்டதாகக் கூறியுள்ளார்.
    21 November 2009
    refugeesவடமராட்சி கிழக்கு நாகர்கோவிலுக்கு அப்பாற்பட்ட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தென்மராட்சி மிருசுவில், கொடிகாமம் முகாம்களில் இருக்கிறார்கள். இவர்களை ராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமான மணல்காடு பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மருதங்கேணி பிரதேச செயலர் ஸ்ரீஸ்கந்தராஜா கூறியுள்ளார்.
    21 November 2009
    mullivaaikkaalசிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை யுத்தக் குற்றவாளிகளாக்கும் திட்டத்தின் பின்னணியில் ஜயந்த ஞானக்கோன் இருப்பதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
    21 November 2009
    Mahinda 121சிறீலங்கா அரசாங்கம் தேர்தல் அறிவிப்பினை ஒத்தி வைத்தமைக்கு விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
    21 November 2009
    sarath-ponseke_sஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெறுவது கடினம் என்று அரசாங்கத் தரப்பிற்கு நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
    21 November 2009
    jvpflag_thumbnailசரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக அவரை நிறுத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம். இது தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் மிக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஜே.வி.பி. அறிவித்துள்ளது.
    21 November 2009
    USA_butenisசிறீலங்காவின் முன்னாள் கூட்டுப்படைத் தளபதி சரத் பொன்சேகா நேற்று மாலை, சிறீலங்காவில் உள்ள அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டின்ஸை சந்தித்துள்ளார்.
    21 November 2009
    leader_lightதலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது
    21 November 2009
    norway-flagஇன கலாச்சார அழிப்பிற்கு நோர்வே ஆற்றும் பங்கு அண்மையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கலை நிகழ்ச்சிகள் ஊடான நோர்வேயின் கலாச்சாரக் கூட்டுத்தாபனம் (RIKSKO SERTRNE) பௌத்த அமைப்பான சேவாலங்காவுடன் இணைந்து காலியில் எதிர்வரும் 27ம் திகதி அன்று ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது என நேற்று வெளியாகியுள்ள ஈழமுரசு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    21 November 2009
    Amnesty Logo - Global Identityவெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்ய இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இலங்கையில் இராணுவத்தால் நடத்தப்படும் முட்கம்பி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் ஏதிலிகளின் விடுதலைக்கு உடன் வழி செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கட்டாயம் வலியுறுத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை நேற்று அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
    20 November 2009
    sarathஓய்வுபெற்ற சரத்பொன்சேகா படையினருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பிவைத்துள்ளாராம். அப் பிரியாவிடைக் கடிதத்தில் நாட்டில் ஜனநாயகத்தை கட்டி எழுப்பும் படியும், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் படியும் மற்றும் மூவின மக்களும் சரி சமனாக நடத்தப்படவேண்டும் எனவும் படையினரைக் கோரியுள்ளாராம்.
    20 November 2009
    divainaவிடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது என்பதை வெளிக்காட்டும் நோக்கில் கொழும்பு நகரில் பாரிய குண்டு வெடிப்பை நிகழ்த்தவிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என திவயின குறிப்பிட்டுள்ளது.
    20 November 2009
    us flagசிறீலங்காவுக்கு தமது நாட்டுப் பிரஜைகள் செல்வது, மற்றும் அமெரிக்க அதிகாரிகள் செல்வது குறித்த பயண எச்சரிக்கையில் எது வித மாற்றங்களும் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
    20 November 2009
    madu_churchஇலங்கை தீவில், சிங்கள மற்றும் இந்திய இராணுவத்தினாலும், இனவெறியர்களாலும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால் மட்டும் 150000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
    20 November 2009
    tissainayagamதமிழ் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடானது நிலுவையில் உள்ள இச்சமயத்தில் அவரைப் பிணையில் விடுவிக்கவேண்டும் என வழங்கிய மனுவை மேல்நீதிமன்றம் வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு எடுப்பதாக தள்ளிவைத்துள்ளது.
    20 November 2009
    Mangala_Samaraweeraஅப்பாவித் தமிழ் மக்களை முள்ளுக் கம்பிகளுக்குள் அடைத்து வைத்துள்ள ஜனாதிபதி, தமிழ் குழந்தைகளை கண்டால் வாரியணைத்து முத்தம் கொடுக்காமல் விடமாட்டார். இவ்வாறு நடந்துகொள்வதில் வெட்கமில்லையா? என்று ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தரான மங்கள சமரவீர எம். பி. தெரிவித்தார்.
    20 November 2009
    Medicinesஇந்தியாவிலுள்ள நான்கு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திகளை சிறீலங்காவுக்கு இறக்குமதி செய்வதை சிறீலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதோடு அவற்றின் உற்பத்திகள் யாவும் சிறீலங்கா அரசாங்க மருத்துவமனைகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டு, அவற்றை தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்று அறிவித்துள்ளார்.
    20 November 2009


    மேலதிக செய்திகள்




    --
    தமிழர் ஊடகம்

    http://groups.google.com/group/currenttamilnews

    Wednesday, November 18, 2009

    அம்சாவின் கைக் கூலி – குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெய்

    Cambidவவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மகபேறுக்கான போதிய சுகாதார வசதிகள் இன்மையால் கடந்த மாதத்திற்குள் 41 குழந்தைகள் இறந்துள்ளன. இதனை தவிர போதுமான மருத்துவ வசதிகள் இன்றி, தினமும் வயோதிபர்கள் பலர் உயிரிழந்து வருவதாக தெரியவந்துள்ளது. விரிவு… »

    பிரதான செய்திகள்

    sarathகார்டிஹேவா சரத் சந்திரலால் ஃபொன்சேகா… இதுதான் இலங்கையில் புயலைக் கிளப்பி இருக்கும் ஃபொன்சேகாவின் முழுப்பெயர். அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்த அவர், விளையாட்டு வீரராகவும் விளங்கியவர். 1970-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்தவர், 1995-ம் ஆண்டு ஹிட்லரையே மிஞ்சுகிற அளவுக்கு அரக்கத்தனமான கொடூரம் ஒன்றை அரங்கேற்றினார்.

    18 November 2009

    sarath_mahindaதமிழகத்திலிருந்து வெளிவரும் விகடன் சஞ்சிகையில் வெளிவந்த "பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமூலம்" கட்டுரை மீனகம் வாசகர்களுக்காக…

    18 November 2009

    karuna-karunaமுள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக  அழுவதாகப் புலம்புகிறார்.

    18 November 2009

    lanka_1000_rs_2[படங்கள்] சிங்களவர்களால் தமிழர்கள் அடிமை கொள்ளப்பட்டதை நினைவுகூரும் முகமாக சிறீலங்கா மத்திய வங்கியினால் புதிய 1000 ரூபா தாள் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

    17 November 2009

    ஏனைய செய்திகள்

    Amnesty Logo - Global Identityஇலங்கையில் அரசினால் நடத்தப்படும் முகாம்களில் தமிழ் ஏதிலிகள் வகை தொகையின்றித் தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமையைக் கண்டித்து சர்வதேச மன்னிப்புச்சபை உலகளாவிய ரீதியில் மாபெரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை ஒன்றை அடுத்துவரும் ஒருவார காலத்துக்குத் தொடர்ச்சியாக நடத்த தீர்மானித்துள்ளது.

    19 November 2009

    leader_16102009_sவாழ்நாள் புரட்சியாளர் சேகுவேராவின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரின் மூத்த மகள் அலைடா, கியுபாவில் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

    19 November 2009

    peoples_barbwireசிறிலங்காவில் முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துவிட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்து ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அங்கு இன்னமும் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவடையவில்லை.

    19 November 2009

    viking_shipஇந்தோனேஷியாவில் கடலில் தரித்து நிற்கும் "ஓசியானிக் வைகிங்" கப்பலிலிருந்து ஏதிலியர்கள் 78 பேரும் வெளியேறி கரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    19 November 2009

    army_busயாழ்.மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்கான பயண அனுமதி தேவையில்லை என வடமாகாண ஆளுநர் அறிவித்த நிலையிலும் நேற்று பயணம் மேற்கொள்ளச் சென்ற பயணிகளிடம் படையினர் பாதுகாப்பு அனுமதி கேட்டுத் திருப்பி அனுப்பியதாகத் திரும்பி வந்த மக்கள் பலரும் விசனம் தெரிவித்தனர்.

    19 November 2009

    mahinda_kotaஇலங்கை அரசை இயக்கிக் கொண்டிருக்கும் ராஜபக்ஷ சகோதர நிறுவனத்தின் அரசியல் கட்டமைப்பின் கண்ணோட்டமாக அமைக்கிறது. இக்கட்டுரை "லக்ருவணி மெதகம" என் பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை கடந்த 8ஆம் திகதிய "இருதின" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.அதன் தமிழ் வடிவமே இது.

    19 November 2009

    P.M.Amzaதமிழ் நிலத்தை ஆண்ட இனம் மாண்டு கிடக்க….மிச்சமுள்ளோர் அடிமை வாழ்க்கையை கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அறிவிலும், புத்திக் கூர்மையிலும் சிறந்த தமிழர் மரபு, குற்ற பரம்பரையாய், நாடு கடத்தப்பட்ட மொக்கு சிங்களனிடம் வீழ்ந்து கிடக்கிறது.

    19 November 2009

    peoples_shoutingதாய் மொழி, தாயக மண், மூதாதையரின் வரலாறு-இம் மூன்றின் பதிப்பாகிய இன அடையாளங்கள் போன்றவை உயிரோடு ஒட்டியவை. இந்த உண்மையை – பொதுவுடைமை சீன அரசு உணர மறுத்து வருவதாலேயே, திபெத் பிரச்சினை அந்நாட்டுக்கு மிகப்பெரிய களங்கமாக சர்வதேச அரங்கில் நீடித்து வருகிறது.

    19 November 2009

    eelanaadu_logo_sமுள்ளிவாய்க்கால் பேரழிவில் ஈழத் தமிழர்கள் தமது படைபலத்தை மட்டும் இழக்கவில்லை, தமது அரசியல் பலத்தையும் சேர்த்தே இழந்துள்ளார்கள் என்பது தற்போதைய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கதகளி நடனத்தினால் உணர்த்தப்பட்டு வருகின்றது.

    19 November 2009

    sidmparam'நாம்' மற்றும்  'போருக்கு எதிரான பத்திரிக்கையாளர்கள் அமைப்பு' என்ற பெயருடன் பல்வேறு பிரபலங்களின் கவிதை தொகுப்பினை ஈழம் மவுனத்தின் வலி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஜாக்கிவாசுதேவ் என்னும் சாமியாரும், பாதிரியார் கஸ்பார் அவர்களும் முன்னின்று நடத்திய இந்த புத்தகவெளியீடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.

    18 November 2009

    leaders familyதமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட ஆல்பம், சில புகைப்படங்கள் உட்பட சில சீருடைகள் மற்றும் சில செய்மதி தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  சிறீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர்.

    18 November 2009

    tna-logoஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.

    18 November 2009

    flag_denmarkஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்பநிலை மாறுபாட்டின் மாநாட்டில் இலங்கை அரசினால் கொல்லப்பட்ட ஈழமக்களின் மனிதபேரவலங்களும் ஈழத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடுகளும் அடங்கிய புகைப்படக் கண்காட்சி தமிழ்மக்களிற்கான மாநாடு மற்றும் ஆர்பாட்டம்.

    18 November 2009

    eelam_flag01நாங்கள் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமை குறித்து கடுமையாக தெரிவித்துவருவதன் காரணம் இன்று தமிழினத்துக்கு சார்பாக சர்வதேசத்தில் உருவாகிவரும் சூழலை நாம் பிரிந்து நிற்பதனால் இல்லாமல் செய்துவிடும் என்ற அச்சத்தினாலாகும்.

    18 November 2009

    nedumaaran2009தன் தவறை மறைக்க அவதூறு செய்கிறார். விடுதலைப் புலிகள் மீது முற்றிலும் உண்மையல்லாத குற்றச்சாட்டுக்களைக் கருணாநிதி தெரிவித்துள்ளார் என பழ.நெடுமாறன்  அவர்கள் கூறியுள்ளார்.

    18 November 2009

    sri lanka electionஇலங்கையில் நடைபெறவுள்ள பாரிய தேர்தல்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    18 November 2009

    karunaமு.கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆகின என்று எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப்போகிறது"என்று கூறியிருக்கிறார். பிஞ்சு குழந்தைகள் தலை,கால், கை என அங்கங்கள் சிதறுண்டு முடங்களாக கிடக்கும்போது,…

    18 November 2009

    leaderதனது படைகளையோ மக்களையோ இறுதிவரை விட்டுச் செல்லாத பிரபாகரனிடமிருந்து நாட்டை விட்டுத்தப்பியோடியவரான சோமவன்ச அமர சிங்க பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மீள் குடியேற்ற அமைச்சுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹேம குமார நாணயக்கார நேற்று தெரிவித்துள்ளார்.

    18 November 2009

    nedumaaran2009ஈழத்தில் மறைந்த தமிழர்களுக்காக தியாக தீபங்களை எதிர்வரும் 27ம் நாள் ஏற்றுவீர் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழ.நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    18 November 2009

    jvpflag_thumbnailபேராதனை பல்கலைக்கழக கலைப்பீட தமிழ் மாணவியின் கைது தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜே.வி.பி, பிரபாகரனிடம் சான்றிதழ் பெற்றதற்காக அந்த மாணவி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளாரென்றால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தங்கப்பதக்கம் பெற்றதற்காகவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியது.

    18 November 2009


    --
    தமிழர் ஊடகம்

    http://groups.google.com/group/currenttamilnews