Monday, November 2, 2009

இந்தியத்தின் அடிமைகளே! இனியாவது விழித்தெழுங்கள்! – க.அருணபாரதி

இந்தியத்தின் அடிமைகளே! இனியாவது விழித்தெழுங்கள்! – க.அருணபாரதி

நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

தேசியத் தலைவரின் ஆளுமையிலிருந்து தமிழர்களை அந்நியப்படுத்த முயல்கின்ற "புதினம்" இணையத்தளம்

செம்மலை, வழுதி, தயாமோகன், பத்மனாதன் அண்ணார்… என இன்னும்சில பெயர்கள் ஈழவிடுதலை வட்டாரங்களில் சில நாட்களாக வெகு வேகமாக உச்சரிக்கப்படுகின்றன.

ஈழத் தமிழர் மறுவாழ்வுத் திட்டங்களை சர்வதேச அமைப்புகள் வழியே நிறைவேற்ற வேண்டும்: தா. பாண்டியன்

ஈழத் தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை இலங்கை அரசு மூலம் நிறைவேற்றாமல் அய்.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் வழியாகவே செயல் படுத்த வேண்டும் என்று கோவையில் நடந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில பொதுச் செயலாளர் தா. பாண்டியன் வற்புறுத்தியுள்ளார்.

ஈழத்தமிழர்களை காக்க உணர்வுகளை வெளிப்படுத்தினாலே தேசியப் பாதுகாப்பு சட்டம் பாயுமா? – கொளத்தூர் மணி ஆவேசம்

இராணுவ வாகனங்களை – தோழர்கள் ஏன் மறிக்க முயன்றார்கள் என்ற உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், கடுமையான குற்றமாகக் கருதி தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தும் – தமிழக அரசின் பார்வையைக் கண்டிக்கிறோம் என்று பெரியார் திராவிடர்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார்.

சிறிலங்காவின் போர்க் குற்றங்களுக்குப் அனைத்துலக விசாரணை தேவை: 'ஜப்பான் ரைம்ஸ்'

சிறிலங்காவின் போர்க் குற்றங்களுக்கு அனைத்துலக விசாரணை தேவை என்று 'ஜப்பான் ரைம்ஸ்' ஏடும் குரல் எழுப்பி உள்ளது.

குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா?? – சீமான் ஆவேச கேள்வி

ஈழத்தமிழர்களை காக்கக்கோரி பெங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசும்பொழுது "குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா??" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம்: தமிழகம் என்ன செய்ய வேண்டும்?

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் தமிழகம் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியில் தமிழ்நாட்டிலுள்ள தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கம் வெளியிட்டுள்ள கட்டுரை.

இறக்கமற்ற இறையாண்மை: ஆனந்த விகடன்

"ஈழத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் வார இதழான 'ஆனந்த விகடன்' வலியுறுத்தியிருக்கின்றது.

தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களை ஒடுக்க பாயும் தே.பா.சட்டம்

தமிழகத்தில் ஈழமக்களுக்கு ஆதரவாக போராடி வருபவர்கள் மீது இந்திய அரசின் தேச பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. இயக்குநர் சீமான், மதிமுகவின் கொள்கை பரப்பாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் பெரியார் திகவின் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்பொழுது சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் கொண்டு செல்லவிருந்த வாகனங்களை தாக்கியதால் கைது செய்யப்பட்ட பெரியார் திகவின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் மீது அச்சட்டம் பாய்ந்துள்ளது. இதைப்பற்றிய தமிழக உறவு ஒருவரின் ஆய்வுக்கட்டுரை.

இதயமில்லாத சிறிலங்காவின் ஆட்சியை நாம் புறக்கணிக்க வேண்டும்: த ரைம்ஸ்

"அடுத்த முறை நீங்கள் ஒரு உடையை அல்லது கையுறையை வேண்டும்போது, அது சிறிலங்காவில் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை நினைப்பில் கொள்ள வேண்டும். உங்களுக்குப் பிடித்தோ பிடிக்காமலோ, அந்நாட்டில் செய்த பொருட்களை வாங்குதல் என்பது சிறிலங்கா அரசின் புலிகளுக்கெதிரான, வெற்றியான ஆனால் மிகக் கொடுமையான இராணுவ நடவடிக்கையில் ஒரு பங்கு வகிக்கிறது." என த ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

No comments:

Post a Comment