Wednesday, April 7, 2010

தமிழினப் படுகொலைகளின் பூமியில் பாலிவுட்டின் விருது வழங்கும் விழா – IIFA 2010 Colombo


தமிழினப் படுகொலைகளின் பூமியில் பாலிவுட்டின் விருது வழங்கும் விழா – IIFA 2010 Colombo

2010 ஜூலை 2ம் தேதியிலிருந்து 4ம் தேதிவரை கொழும்புவிலுள்ள சுகத்ததாச உள் அரங்கத்தில் IIFA தனது விருது வழங்கும் விழாவை நடத்த உள்ளது. உலகம் போற்றும் பாலிவுட் திரை நட்சத்திரங்களான அமிதாப்பச்சன்,ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரும் விழாமேடையில் தோன்றி சிங்கள மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க இருக்கிறார்கள். மேலும் »

6 இலங்கை மீனவர்கள் விடுதலை

இந்திய கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 6பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மண்டபம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு மீன்பிடிப்படகுடன் நேற்று தமது நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

இன்று உலக சுகாதார தினம்

உலக சுகாதார தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் வருடாந்தம் ஏப்றல் 7ம் திகதி உலக சுகாதார தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. மேலும் »

புலிகளின் திசையில் புறப்படுவோம் – கண்மணி

வரலாற்றில் எங்கேயும் இல்லாத எழுச்சி, தமிழீழத்தில் பதிவு செய்யப்பட்டது. வீழ்கிறோமா, எழுகிறோமா என்பதல்ல. இதில் ஏதாவது ஒன்றுதான் நடைமுறையாகும். ஒவ்வொரு நிலையிலும் ஏதோ இரண்டு இருக்கும். அதில் ஒன்றையே வென்றெடுக்கமுடியும். மேலும் »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அகற்றப்பட வேண்டும் – ஈழவேந்தன்

"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை" என்ற கொள்கைகளைக் கைவிட்டு, சரணாகதி அரசியலுக்குள் நுழைந்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் இருப்பவர்கள், அந்தப் பதவிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தெரிவித்துள்ளார். மேலும் »

தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றுடன், தேசம் என்ற கோட்பாடும் மிகவும் முக்கியம் – ஜெயானந்தமூர்த்தி, இதயச்சந்திரன்

"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை" என்பவற்றுடன் தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்பது மிகவும் முக்கியம் என, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, மற்றும் அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன் ஆகியோர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளனர். மேலும் »

திருமலையில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்ய 50,000 ரூபா, தடுக்க 50,000 ரூபா, வேட்டி, சேலையும் வழங்கப்படுகின்றது

திருகோணமலை மாவட்டத்தில் கொள்கை அடிப்படையில் "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியுடன்" பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ள தமிழரசுக் கட்சியினரும், சம்பந்தனின் ஆதரவாளர்களும் பல்வேறு தந்திரோபாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் »

பொய்ப் பரப்புரையில் ஈடுபடும் தமிழ்வின் இணையத்தளம் – முகுந்தன், ஜோன்சன் கண்டனம்

தமிழ்த் தேசியத்திற்காகக் குரல் கொடுக்கின்றோம் எனக்கூறும் "தமிழ்வின்" இணையத்தளம், கடந்த சில நாட்களாக தமிழ்த் தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை வேட்பாளர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். மேலும் »

இலட்சியத்தை அடையும் பாதையில் தாயகமும் புலமும் சேர்ந்து பயணிப்போம்!

அன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே! எமது நீண்ட தமிழ்த் தேசிய விடுதலைப் பயணம் இன்று மிக முக்கியமான கட்டத்தில் வந்து நிற்கின்றது. எமது தாயக நிலப்பரப்பு படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு கடந்த ஆண்டு இராணுவத்தால் முழுமையாக விழுங்கப்பட்டு நிற்கின்றது. மேலும் »

ஜெயசூரியா நேற்று போட்டி நடந்த மைதானம் பக்கம் தலைகாட்டவே இல்லை

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி அறிவித்த போராட்டத்தால் பயந்துபோன இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா நேற்று போட்டி நடந்த மைதானம் பக்கம் தலைகாட்டவே இல்லை.  தற்போது இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சில அணிகளில் இலங்கை வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் »

கச்சத்தீவு – திரும்பப்பெறுவதே நிரந்தர தீர்வு

கச்சத்தீவு… நம்மில் பலருக்கும் இது ஒரு சர்ச்சைக்குரிய தீவாகவே காட்சியளிக்கிறது. ஆம் இங்கு மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை இலங்கை ரானுவம்(கடற்படை) ஏதோ குருவிகளை சுட்டுத்தள்ளுவதைப் போல சுட்டுத்தள்ளுவதும், பிடித்துப்(கடத்தி) போய் சிறையிலடைப்பதுமாய் தனது சேட்டைகளை அரங்கேற்றி வருகிறது. நாளுக்குநாள் தனது வன்முறை எல்லையை விரித்துக் கொண்டே போகிறது. மேலும் »

தவறாது வாக்களியுங்கள் யாருக்கு என்ற முடிபு உங்களிடமே

நாளை எட்டாம் திகதி. நாடாளுமன்றத் தேர்தல். தேர்தலில் வாக்களியுங்கள் என்று தென்பகுதி மக்களைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வடக்கில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் நிலைமை அப்படியல்ல. மக்களே வாக்களியுங்கள் என்று கேட்க வேண்டிய தேவையுண்டு. அதற்குக் காரணமும் இருக்கவே செய்கின்றது. மேலும் »

ஏன் நாம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்க வேண்டும்? – சேரலாதன்

இரு நாடுகள் கொண்ட ஒரு தேசம் என்ற அரசியல் தீர்வை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி இலங்கையின் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றமை களத்திலும் புலத்திலும் கடும் வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருப்பதுடன் மக்கள் மத்தியிலே குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் »

6 ஆயிரம் வரையான போராளிகளுக்கு என்ன நடந்தது…?

பதினோராயிரம் இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளித்து வருவதாகவும், இவர்கள் பற்றிய தகவல்கள் குறித்த அமைச்சின் இணைய தளத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளதாகவும் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் மேலும் »

விமல் வீரவன்சா அண்ணா எமது குடும்ப உறுப்பினர் போன்றவர்: நமால்

விமல் வீரவன்சா அண்ணா எமது குடும்ப உறுப்பினர் போன்றவர், அவரை எனது தந்தையார் பிள்ளையை போலவே பார்ப்பதுண்டு என சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவின் முத்த புதல்வர் நமால் ராஜபக்சா தெரிவித்துள்ளார். மேலும் »

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருமலை வேட்பாளர் மீது கத்திக்குத்து

"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமைகொண்ட தேசம்" என்ற கொள்கை முன்வைத்து தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை வேட்பாளரான பிலிப்பையா ஜோன்சன் மீது இனம் தெரியாத நபர்கள் கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மேலும் »

புலம்பெயர் மக்களையும் அமைப்புக்களையும் புறக்கணிக்கும் சம்பந்தர் எதனைச் செய்யப் போகின்றார்

"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை" என்ற கொள்கைகளைக் கைவிட்டு, இராஜதந்திரம் என்ற பெயரில் சமஸ்டிக்குள் நுழைந்து ஈழத்தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், புலம்பெயர்ந்த மக்களையும், அவர்தம் அமைப்புக்களையும் புறந்தள்ளி எதனைச் செய்யப் போகின்றார்கள், என்ன தீர்வைப் பெற்றுத்தரப் போகின்றார்கள் என புலம்பெயர்ந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் »

அநீதிக்கு எதிரான சமர்களம் – கண்மணி

தமிழ்நாட்டில் மக்களின் உளவியல் எதிர்ப்பின்றி முடக்கப்பட்டுக் கொண்டிருப்பதை காணமுடிகிறது. எதையும் தீர்மானிக்கும் ஆற்றல் வாய்ந்ததாக ஊடகங்களின் வளர்ச்சி ஆதிதமாய் அசூரத்தனமாய் இருப்பதை இன்றைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. மேலும் »

எழுச்சித்தமிழன் முத்துக்குமரனின் தியாகமும் இறுதி நிகழ்வும் – மே 17 இயக்கம்

தமிழகத்தில் தமிழீழ ஆதரவு எழுச்சியை ஏற்படுத்திய எழுச்சித்தமிழன் முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கியவர்களைப்பற்றி இறுதிநிகழ்வில் பங்கேற்ற இயக்குநர் ராம், இராவணன் ஆகியோர் தெளிவாக தங்கள் சாட்சியங்களை மீனகத்தில் ஏற்கெனவே பதிவு செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக மே 17 அமைப்பின் திருமுருகன் அவர்களின் ஒலிப்பதிவினை இங்கே பதிவுசெய்துள்ளோம். மேலும் »

சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் – மீனகம்

சிறிலங்காவில் எதிர்வரும் ஏப்றல் 8ம் திகதி நடைபெறப்போகும் நாடாளுமன்றத்தேர்தலுக்கான பிரச்சாரப்பணிகள் தற்போது சிறிலங்கா முழுவதிலும் வேகம் பெற்றுள்ள ஒரு நிலையை பொதுவாக அவதானிக்கமுடிகின்றது. வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதியும் இதற்கு விதிவிலக்கல்லாத நிலையில் காணப்படுகிறது. மேலும் »


No comments:

Post a Comment