Thursday, February 4, 2010

சுதந்திர தினமா? சுதந்திர நினைவு தினமா?

இலங்கையின் 62ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. ''சுதந்திரம்'' என்பதன் காற்றைக்கூட சுவாசிக்க முடியாத மக்கள் நாட்டில் இருக்கும் போது சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெறுவது என்பது வெறும் சம்பிரதாயமான விடயமே அன்றி அதில் உள்ளார்ந்தமான பற்றுதல் ஏதும் இருக்க முடியாது.அதிலும் 2010ஆம் ஆண்டில் நடைபெறும் 62ஆவது சுதந்திர தினத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.அவ்வாறாயின் இலங்கையின் 62ஆவது சுதந்திரதினத்தை ஆளும் தரப்பு மட்டுமே கொண் டாடவுள்ளது.
4 February 2010
தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் அண்மையில் அதாவது 02 /01 /2010 இல் நடத்தப்பட்ட காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் மிகுந்த மன வேதனையை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இது தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் நடைபெற்ற சம்பவம்.
4 February 2010
செங்கல் பட்டு  சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்படடிருந்த 33 தடுப்புக் கைதிகள் மீது இன்று (புதன்கிழமை)  காலை தமிழக காவல்படை மேற்கொண்ட கண்மூடித்தனமான தாககுதலில்   18 க்கும் மேற்பட்ட கைதிகள்  படுகாயமடைந்துள்ளார்கள். ஒருவர் கை முறிந்த நிலையில்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
4 February 2010
'பிரபாகரன் இருக்கிறார்' என்கிற உறுதியான மனநிலையே தமிழ் மக்களுக்கு உயரிய பாதுகாப்பாக இருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விகடன் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
1 February 2010
[ஆதாரம் இணைப்பு] தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில்  சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே.
29 January 2010


No comments:

Post a Comment