Sunday, March 7, 2010

முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் தோல்வி அரசியல்

தமிழன் உலகெங்கும் தமக்கான ஆற்றலை, ஆளுமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றான். ஆனால் தமிழின ஆளுமையை தந்திரமாக அழித்தொழிக்க அனைத்து நகர்வுகளையும் பல்வேறு முறைகளில், பல உருவங்களில், பல  தேசிய இனங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் கூட, தமிழினம் இன்னும் தம்மை ஓர்மைப் பண்புக்குள் கொண்டுவராமல் பல்வேறு பிளவுகளை உருவாக்கிக் கொண்டு, தமிழனுக்குள் தமிழன் எதிரணியாய்  களம் புகும் அவலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றான்.

Google Buzz
7 March 2010
 

சென்ற மே 18ஆம் நாள் கசப்பான முடிவுக்கு வந்த நான்காம் கட்ட ஈழப்போரில் ஏறத்தாழ இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது ஒரு மதிப்பீடு. கொடுங்காயமுற்றவர்கள், கை கால் இழந்தவர்கள், மன அதிர்ச்சிக்கு ஆளாகி நடைப் பிணமாகிப் போனவர்கள் – இவர்களுக்கெல்லாம் கணக்கே இல்லை. புலிப் படையின் எதிர்ப்புப் போர் முடிந்தது என்ற பொருளில் போர் முடிந்துள்ளதே தவிர, மக்கள் மீதான சிங்கள அரசின் இன அழிப்புப் போர் முடிந்து விடவில்லை. மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இன்றளவும் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Google Buzz
7 March 2010

No comments:

Post a Comment