Friday, March 26, 2010

சிங்களவர்கள் எங்களது கஷ்டங்களைப் பார்க்க சந்தோஷமாக வருகிறார்கள் – தீபச்செல்வன்


சிங்களவர்கள் எங்களது கஷ்டங்களைப் பார்க்க சந்தோஷமாக வருகிறார்கள் – தீபச்செல்வன்

கிளிநொச்சியை நான் விட்டு இறுதியாய் திரும்பும் பொழுது அது கொண்டிருந்த செழிப்பையும் வலிமையையும் நினைவு கொண்டு பார்கிறேன். ஆனால் இன்று அந்த அற்புத நகரம் முழுவதும் சிதைந்து போயிருக்கிறது. இடிபாடடைந்த ஒரு நகரத்திற்கு நான் சென்றேன். இராணுவ மயமும் இராணுவ நடமாட்டமும் என்று பயங்கரம்தான் மிகுந்திருக்கிறது. மேலும் »

ஒஸ்லோ பிரகடனத்தை ஏற்க முடியாது, இளைஞர்களுக்கு வாக்களியுங்கள் – திருமலை வேட்பாளர் கண்மணி அம்மா

தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு முன்வைத்துள்ள ஒஸ்லோ பிரகடன தீர்வுத் திட்டத்தை ஏற்க முடியாது எனவும், திருகோணமலை மக்கள் கொள்கையுடன் தேர்தலில் களமிறங்கியுள்ள இளைஞர்களை தெரிவு செய்வதன் ஊடாக தமது தாயகக் கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என, திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளராக கண்மணி அம்மா இரத்தினவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் »

திலிபன் தமிழ் வீரத்தின் அடையாளம் – கண்மணி

பேயாட்டம் போடும் மகிந்தாவின் அரசுக்கு முடிவுரைக்கான காலம் இதோ நெருங்கிவிட்டது. துட்டகைமுனியின் தொடராய் மகிந்தாவின் அக்கிரமங்கள் இதோ அழிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. மேலும் »

வன்னியில் மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த படையினர்!

கடந்த புதன்கிழமை வன்னி ஆனைவிழுந்தானில் பாடசாலை மாணவியொருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த படையினரின் முயற்சி  அப்பகுதி மக்களால் ஒன்றுபட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் »

சுயநலமான அரசியல் தலைமைகளை புறக்கணித்து தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் – வைத்திய கலாநிதி திருலோகமூர்த்தி

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மக்களின் பெரும் ஆதரவை பெற்று வருகின்றது.இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்ட வேட்பாளர் வைத்திய கலாநிதி கந்தசாமி திருலோகமூர்த்தி கொக்குவில் பொற்பதி இந்து  விளையாட்டு கழகத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் »

தமிழீழ வான் புலிகளின் முதல் தாக்குதல்(26.03.2007) மூன்றாண்டுகள் நிறைவு

"கப்பல் ஓட்டினான் தமிழன் அன்று, விமானம் ஓட்டி தாக்குதல் நடத்துவான் தமிழன் இன்று" என்று தமிழ் தேசியத்தலைவரின் தலைமையில்  தமிழீழ விடுதலைப்புலிகள் உலகுக்கு வெளிப்படுத்திய நாளின் (26.03.2007) மூன்றாம் ஆண்டு இன்று. மேலும் »

தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபிகளை குப்பைக்குள் போட்டுள்ள சிங்கள காடையர்

சிறீலங்கா இராணுவம் மற்றும் சிங்களக் காடையார்களால் கடந்த திங்களன்று இரவு இடித்து நொருக்கப்பட்ட தியாகி லெப்.கேணல் திலீபனின் நினைவுத்தூபி, அதிலிருந்து 300 மீற்றர் தொலைவில் உள்ள மாநகரசபையின் குப்பைகொட்டும் இடத்திற்கு எடுத்துச் சென்று வீசப்பட்டுள்ளது. மேலும் »

'சிறிலங்காவைப் புறக்கணியுங்கள்' – சுரேன் சுரேந்திரன்

"மனித உரிமைகள் என்பது மேற்கத்தைய விழுமியங்கள் எனக் கோரி அவைபற்றிய கண்டனங்களிலிருந்து தப்பிக்கொள்ளச் சில அரசுகள் முயற்சிக்கின்றன. ஆனால்- கண்டனங்களில் பங்குபற்றியதால் இரானில் சிறையிடப்பட்டவர்களாயினும் சரி இரஸ்சியாவிற் கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளாராயினும் சரி மேலும் »

வடஇலங்கை கிராமம் ஒன்றில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பலி நிறைவேற்றப்பட இராணுவம் அனுமதி

இலங்கையில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் பாழடைந்துள்ள கத்தோலிக்க ஆலயம் ஒன்றில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது மக்கள் மனதில் ஒரு நிறைவைத் தந்துள்ளது என்று அருட்பணியாளர் ஒருவர் கூறினார். மேலும் »

ஐ.நா. சபை வளாகத்தில் சிங்களப் பேரினவாதம் விடுத்த மிரட்டலுக்கு எதிராக தமிழினம் பொங்கி எழவேண்டும் !

ஐ.நா. வளாகத்திலேயே அண்மையில் தமிழர் மனித உரிமைக் கழகத்தின் செயலர் சிங்கள பேரினவாத அரசின் கைக் கூலிகளால் அச்சுறுத்தலுக்கும் அவமானகரமான சூழலுக்கும் உள்ளாக்கப் பட்ட சேதி தமிழ் இனத்துக்கே உலக அரங்கில் விடுக்கப்பட்ட மிரட்டலாகும். மேலும் »

கிரிஸ்ரினா அம்மையார் யாழ் வருகை

சிறிலங்காவுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவரான கிரிஸ்ரினா றொபீச்சோன் அம்மையார் வியாழனன்று (25.03.2010) யாழ்ப்பாணத்திற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். மேலும் »

சிறிலங்காவில் பௌத்தத்திலிருந்து வேறு மதம் மாறினால் தேசத்துரோகமாம்

பௌத்த சமயத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய சிறிலங்காப் பெண்ணொருவர் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. மேலும் »

யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்

இலங்கையின் பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்திற்காள மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் »

கோப்பாயில் கிணறில் பெண்ணின் சடலம்

கோப்பாய் தெற்கில் கிணறு ஒன்றிலிருந்து நேற்று மாலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் »

ஐ.தே.க. தேர்தல் பரப்புரையில் தமிழீழ விடுதலைப்பாடல்கள்

யாழ்மாவட்டத்தில்  தமிழீழ விடுதலைக் கலைஞர்களினால் உருவாக்கப்பட்டுள்ள இசைப்பாடல்களை ஒலிபரப்பி ஜக்கியதேசியக்கட்சி தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

காணாமல்போன ஊடகவியலாளர் தொடர்பான விசாரணை விபரங்களை சிறீலங்கா வெளியிடவேண்டும்: எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்

சிறீலங்காவில் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொட தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் விபரங்களை வெளியிட சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சா உத்தரவிட வேண்டும் என எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் »

சிங்கள மக்களுக்கு உள்ள அத்தனை உரிமைகளும் தமிழருக்கு இருக்க வேண்டும்: பத்மினி சிதம்பரநாதன்

விருப்பம் எப்படியோ அப்படியே தமிழர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பும் இந்திய அரசின் விருப்பப்படிதான் தமிழர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று மற்றொரு தரப்பும் தமிழர்களுக்கு போதிக்க முயல்கிறது. மேலும் »

கிளிநொச்சி பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களை சிறிலங்கா அரசு முற்றாக புறக்கணித்துள்ளது

கிளிநொச்சி பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் அரசின் புறக்கணிப்பால் மிகப்பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

இலங்கை தமிழ் ஏதிலிகளை மலேசியா உடனே விடுதலை செய்யவேண்டும்: மலேசியா மனித உரிமை அமைப்பு

தடுத்தவைக்கப்பட்டுள்ள 45 இலங்கை தமிழ் மக்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என பொதுமக்கள் மலேசிய அரசுக்கு கடிதங்களை அனுப்பவேண்டும் என மலேசியா மனித உரிமைகள் அமைப்பான சுவோரம் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் »

அவுஸ்திரேலிய கடற்பகுதியில் 94 ஏதிலிகளுடன் படகு மீட்பு

அவுஸ்திரேலியாவின் கடற்பரப்பில் 94 ஏதிலிகளுடன் கூடிய படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படகில் இலங்கையர்களும் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் »


No comments:

Post a Comment