Monday, November 30, 2009
உறவுகளே உங்களின் பங்களிப்பினை வழங்குங்கள்
Sunday, November 29, 2009
Fwd: மீனகம் தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது
From: ஆசிரியர் <editor@meenagam.org>
Date: 2009/11/29
Subject: மீனகம் தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது
To: Breaking Tamil News <currenttamilnews001@gmail.com>
தமிழீழ தமிழக புலம்பெயர்வாழ் தமிழர் செய்திகளை உறுதிப்படுத்தி விரைவாக அளித்து வந்த எமது மீனகம் தளத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததன் காரணமாக சர்வர் அளித்தவர்கள் சர்வரை மேம்படுத்தக்கூறினார்கள். அதற்குண்டான பொருளாதார வசதி எமக்கு இதுவரை கிடைக்கப்பெறாததால் எமது தளத்தினை நிறுத்திவிட்டார்கள்.
மீண்டும் எமது தளத்தினை மீளெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்குண்டான பொருளாதார வசதி கிடைக்கப்பெற்றவுடன் எமது மீனகம் தளத்தின் சேவை மீண்டும் செயல்படும்.
நாம் புலம் பெயர்ந்தது அகதியாக வாழ்ந்து மடிவதற்காக இல்லை, மனதில் உறுதி வேண்டும்; தேசப் பணியாற்ற விரைந்துவா
சில சந்தர்ப்பங்களில் குழப்பமான சூழலில் சிக்குண்டு வாழும் நிலை எமக்கு விதிக்கப் பட்டு விடுகின்றது. எம்மை மீறிய செயல்ப்பாடுகள்… எம்மால் சுமக்க முடியாத சுமைகள் எம் மீது சுமத்தப்படும் போது அவை எம்மை திக்குமுக்காடச் செய்து விடுகின்றுது. எதையும் சமாளிக்க முடியாது என்ற ஒரு சூழலில் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றோம்.‘புதிய சூரியதேவன்’ நாடகத்தில் தளபதி ராமுக்கும், கோத்தபாயவுக்கும் சிறந்த நடிகர்கள் விருது! – சி. பாலச்சந்திரன்
சூரிய தேவனின் வரவினால் சூரஜயகாந்திப் பூக்கள் மலர்ந்து சிரித்தன. சூரிய தேவனை வாழ்த்தித் துதித்தன. சூரிய தேவனே தங்களது வாழ்தலுக்கான உயிர் சக்கி எனத் தொழுதன. நண்பகல் பொழுது நெருங்க நெருங்க சூரிய தேவனின் ஒளிக் கதிர்களின் வெப்பம் அதிகரித்துச் சென்ற போதும், அதனையும் சுகமாகவே மகிழ்ந்து அனுபவித்தன சூரியகாந்திப் பூக்கள். Saturday, November 28, 2009
மாவீரச் செல்வங்களை கொலைகாரர் என்று கூறியதன் மூலம் பேரினவாதத்தின் பிச்சைக்காரன் நீர் என்பதை மீண்டும் ஒருமுறை அறியத்தந்துவிட்டீர் – யாழிலிருந்து சனீஸ்வரன்
Friday, November 27, 2009
audio: சீமான், கொளத்தூர் மணி, தியாகி முத்துக்குமரனின் தந்தை, பத்திரிக்கையாளர் அய்யநாதன் மாவீரர் நாள் உரைகள்
மாவீரர் நாள்: காப்டன் மில்லர் நினைவரங்க திறப்பு – கொளத்தூர் மணி உரை
[ஒலி] புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழக மாநிலத்தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் இன்று நடைபெற்ற காப்டன் மில்லர் நினைவரங்க திறப்பு விழா மற்றும் மாவீரர் நாள் நிகழ்வில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.
இயக்குநர் சீமானின் மாவீரர் நாள் உரை
[ஓலி]இயக்குநர் சீமானின் மாவீரர் நாள் உரை
[ஒலி] மாவீரர்கள் புகழ் ஒருநாளும் மறையாது: தியாகி முத்துக்குமரனின் தந்தை
[ஓலி]தமிழின விடுதலைக்காக தமிழ்நாட்டில் தன்னுடலை தீயினில் பொசுக்கி உயிர் நீத்த தியாகி முத்துக்குமரனின் தந்தை குமரேசன் மாவீரர் நாளுக்காக மீனகம் தளத்தின் ஊடாக தமிழர்களுக்கு அளித்த உரை.
இந்திய சிங்கள கூட்டுச்சதியால் கனடாவிலிருந்து செந்தமிழன் சீமான் வெளியேற்றம்
[ஒலி] தமிழகத்தின் திரைப்படத் தயாரிப்பாளரும் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
மாவீரர் உயிரிழந்ததின் இலக்கினை நாம் அடைய வேண்டும் – பத்திரிக்கையாளர் அய்யநாதன்
[ஒலி]தமிழ் வெப்துனியா ஆசிரியரும் தமிழீழ ஆதரவாளருமான அய்யநாதன் அவர்கள் மாவீரர் நாளுக்காக மீனகம் தளத்தின் வழியாக தமிழின மக்களுக்கு அளித்த உரை.
தேசியத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து – உரை கொளத்தூர் மணி
[காணொளி] 1989 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று ஊடகங்கள் கூறிய பொழுது தமிழீழம் வந்து தலைவருடன் நிழற்படங்கள் எடுத்து தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலகத்துக்கு கூறியது போன்ற வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா…? என்று பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.
[காணொளி] அவுஸ்திரேலியாவும் – தமிழீழமும்: அவுஸ்திரலியா ஊடகத்தின் ஒரு பார்வை
அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை "தமிழ் ஏதிலிகளின்" பிரச்சினை பெரிய அளவில் அரசியல் மற்றும் கொள்கை மாற்றங்களினை ஏற்படுத்தியுள்ளது.கடந்த காலங்களில் "தமிழர்களின்" பிரச்சினைகளை அவலங்களை பற்றி பேசாமல் தவிர்த்து வந்த முக்கியமான ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பேச ஆரம்பித்திருப்பது மிகப்பெரிய மாற்றம்.
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
Thursday, November 26, 2009
தியாகி முத்துக்குமரனின் தந்தை அளித்த மாவீரர் தின செவ்வி
Wednesday, November 25, 2009
இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்: புலிகளின் புதிய நம்பிக்கை
நாம் எமது தலைவனை நேசிப்பது உண்மை என்றால் போராடுவோம்
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான 1976ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் அறிக்கைகள் மூலம் தமது செயல்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதை மக்கள் அறிந்திருந்தனர். மாறாக பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர் புலிகள். வெறுமனவே அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர முயற்சிக்கவில்லை புலிகள், மாறாகத் தமிழ் மக்கள் விடிவிற்காய் போராடினர். --
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
வெளிப்படையாகச் சொல்லுங்கள், ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்? – ஜெகத் கஸ்பாரும் தமிழீழமும்…
கமல்ஹாசன் முதல் ரஜினி வரை நூறு பிரபலங்கள் பங்களித்திருக்கும், `ஈழம்… மௌனத்தின் வலி' என்கிற கவிதை நூல் வெளிவந்திருக்கிறது. தமிழ் மையம் இயக்குனர் பாதிரியார் ஜெகத் கஸ்பருக்குச் சொந்தமான `நல்லேர் பதிப்பகம்' சார்பில், வெளி வந்திருக்கும் அந்தக் கவிதை நூல் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
Tuesday, November 24, 2009
கார்த்திகை 27ல் மாவீரர் நாள் உரையாற்றுவதா… இல்லை தற்போதுபோன்று ஏதுமற்ற வெறுமை நிலையினை தொடர்வதா…
21/11/2009 | 6:45 am
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது [விரிவு] »19/11/2009 | 10:40 am
வாழ்நாள் புரட்சியாளர் சேகுவேராவின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரின் மூத்த மகள் அலைடா, கியுபாவில் ஓர் அறிக்கை வெளியிட்டார். [விரிவு] »19/11/2009 | 6:28 am
தமிழ் நிலத்தை ஆண்ட இனம் மாண்டு கிடக்க….மிச்சமுள்ளோர் அடிமை வாழ்க்கையை கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அறிவிலும், புத்திக் கூர்மையிலும் சிறந்த தமிழர் மரபு, குற்ற பரம்பரையாய், நாடு கடத்தப்பட்ட மொக்கு சிங்களனிடம் வீழ்ந்து கிடக்கிறது. [விரிவு] »18/11/2009 | 2:53 pm
தமிழகத்திலிருந்து வெளிவரும் விகடன் சஞ்சிகையில் வெளிவந்த "பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமூலம்" கட்டுரை மீனகம் வாசகர்களுக்காக… [விரிவு] »18/11/2009 | 12:49 pm
முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக அழுவதாகப் புலம்புகிறார். [விரிவு] »16/11/2009 | 6:35 pm
2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி நான்காம் கட்ட ஈழப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டுவிட்டதாகவும் இலங்கை அரசு பெருமிதத்துடன் அறிவித்தது. போரின் கடைசிக் கட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். [விரிவு] »--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
தப்புத்தாளம் போடும் கிஷோரும், சிறிகாந்தாவும்! (பூனை இல்லாத வீட்டில் எலி சன்னதம் – புலி இல்லாத நாட்டில் பூனைகள் ஓடி விளையாடுகின்றன)
Monday, November 23, 2009
தனி ஈழம் வேண்டும்; இந்தியாவுக்காக!
சிரிப்புக்குள்ளாகியுள்ள செம்(மறி) மொழி மாநாடும் சிக்கலில் மாட்டியுள்ள சிவத்தம்பியும்: சங்கிலியன்
ஈழத்தமிழினத்தின் பாரிய அழிவின் பங்காளி என்ற பட்டத்திற்கு முழுமையான உரித்துடையவர் என்று உலகத் தமிழர்களினால் சூட்டப்பட்ட தமிழ் வளர்தத (தமிழால், தனது குடும்ப அரசியல், பொருளாதாரம், முதல்வர் பதவி என்பவற்றில்| தன் நிலைய வளர்ததுக் கொண்டவர்) தமிழக முதல்வர் மு.கருணாநிதி உலகத்தமிழர் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை எப்படியாவது நடத்திவிட வேண்டுமெனப் பகீரதப் பிரயத்தனம் செய்து காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
இழப்புகளின் மீதான இவர்களின் இருப்புகள் : தமிழர்களின் எதிர்காலம் யார் கையில் ???
Sunday, November 22, 2009
உலகிற்கு ஏற்றவாறு இலட்சியத்தை மாற்ற முடியாது
33 வருடகால தேசிய இன விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய போராட்டம், முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்டதால், வரலாற்றுத் தவறாக அது மாறிவிடாது. ஒரு போராட்ட வடிவம் சிதைக்கப்பட்டதால், போராடுவதற்குக் காரணியாக அமைந்த அடிப்படைகள் அழிந்து போகாது.
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
Saturday, November 21, 2009
மாவீரர் தின உரை நிகழ்த்தப்போவது யார்…? – குமுதம் சஞ்சிகை
வவுனியாவில் உள்ள தடுத்து முகாம்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல், சுதந்திர நடமாட்டத்திற்காக திறந்து விடப்படும் என அரசாங்கத்தின் சார்பில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இதனை சற்று முன்னர் வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் வைத்து அறிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலுக்கு அப்பாற்பட்ட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தென்மராட்சி மிருசுவில், கொடிகாமம் முகாம்களில் இருக்கிறார்கள். இவர்களை ராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமான மணல்காடு பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மருதங்கேணி பிரதேச செயலர் ஸ்ரீஸ்கந்தராஜா கூறியுள்ளார்.
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது
இன கலாச்சார அழிப்பிற்கு நோர்வே ஆற்றும் பங்கு அண்மையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கலை நிகழ்ச்சிகள் ஊடான நோர்வேயின் கலாச்சாரக் கூட்டுத்தாபனம் (RIKSKO SERTRNE) பௌத்த அமைப்பான சேவாலங்காவுடன் இணைந்து காலியில் எதிர்வரும் 27ம் திகதி அன்று ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது என நேற்று வெளியாகியுள்ள ஈழமுரசு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்ய இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இலங்கையில் இராணுவத்தால் நடத்தப்படும் முட்கம்பி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் ஏதிலிகளின் விடுதலைக்கு உடன் வழி செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கட்டாயம் வலியுறுத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை நேற்று அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவிலுள்ள நான்கு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திகளை சிறீலங்காவுக்கு இறக்குமதி செய்வதை சிறீலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதோடு அவற்றின் உற்பத்திகள் யாவும் சிறீலங்கா அரசாங்க மருத்துவமனைகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டு, அவற்றை தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்று அறிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
- ஓசியானிக் வைக்கிங் பெண்கள் தாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்
- இராணுவம் வழிகாட்டும் பயணம் என்பதால் முகாம்களுக்கு செல்லும் அழைப்பை நிராகரித்தேன்: சிவசக்தி ஆனந்தன்
- போரில் சிக்கி உயிரிழந்த மக்களின் மரணச் சான்றிதழைப் பெறுவதில் உறவினர்கள் சிரமம்
- வாடகைக்கு வீடு தேடுகிறார் சரத் பொன்சேகா: உரிமையாளர்கள் மிரட்டப்படுவதால் பெறுவதில் சிரமம்
- அனோமா பொன்சேகாவும் இராணுவத்தின் ரணவிரு சேவா அதிகார சபைப் பொறுப்பிலிருந்து பதவி விலகல்!
- தமிழர்கள் நாட்டில் எங்குமே சுதந்திரமாக நடமாடமுடியாத சூழ்நிலை இலங்கையில்!
- காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! – வைகோ கண்டனம்!
- தமிழர்களை அவமானப்படுத்தும் நிகழ்ச்சிக்கு நோர்வே நிதியுதவி
- கருணாநிதியின் அறிக்கையை கண்டித்து தமிழகத்தில் சுவர் ஓட்டிகள்
- தமிழனுக்கு அகதி என்று பேர்!
- மன்னாரில் நிலக்கண்ணி வெடி அகற்றலில் ஈடுபட்ட இருவர் படுகாயம்
- பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் கருணாநிதி: ஜெயலலிதா
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
Wednesday, November 18, 2009
அம்சாவின் கைக் கூலி – குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெய்
வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மகபேறுக்கான போதிய சுகாதார வசதிகள் இன்மையால் கடந்த மாதத்திற்குள் 41 குழந்தைகள் இறந்துள்ளன. இதனை தவிர போதுமான மருத்துவ வசதிகள் இன்றி, தினமும் வயோதிபர்கள் பலர் உயிரிழந்து வருவதாக தெரியவந்துள்ளது. விரிவு… »
பிரதான செய்திகள்
கார்டிஹேவா சரத் சந்திரலால் ஃபொன்சேகா… இதுதான் இலங்கையில் புயலைக் கிளப்பி இருக்கும் ஃபொன்சேகாவின் முழுப்பெயர். அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்த அவர், விளையாட்டு வீரராகவும் விளங்கியவர். 1970-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்தவர், 1995-ம் ஆண்டு ஹிட்லரையே மிஞ்சுகிற அளவுக்கு அரக்கத்தனமான கொடூரம் ஒன்றை அரங்கேற்றினார்.
முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக அழுவதாகப் புலம்புகிறார்.
ஏனைய செய்திகள்
இலங்கையில் அரசினால் நடத்தப்படும் முகாம்களில் தமிழ் ஏதிலிகள் வகை தொகையின்றித் தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமையைக் கண்டித்து சர்வதேச மன்னிப்புச்சபை உலகளாவிய ரீதியில் மாபெரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை ஒன்றை அடுத்துவரும் ஒருவார காலத்துக்குத் தொடர்ச்சியாக நடத்த தீர்மானித்துள்ளது.
'நாம்' மற்றும் 'போருக்கு எதிரான பத்திரிக்கையாளர்கள் அமைப்பு' என்ற பெயருடன் பல்வேறு பிரபலங்களின் கவிதை தொகுப்பினை ஈழம் மவுனத்தின் வலி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஜாக்கிவாசுதேவ் என்னும் சாமியாரும், பாதிரியார் கஸ்பார் அவர்களும் முன்னின்று நடத்திய இந்த புத்தகவெளியீடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.
மு.கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆகின என்று எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப்போகிறது"என்று கூறியிருக்கிறார். பிஞ்சு குழந்தைகள் தலை,கால், கை என அங்கங்கள் சிதறுண்டு முடங்களாக கிடக்கும்போது,…
தனது படைகளையோ மக்களையோ இறுதிவரை விட்டுச் செல்லாத பிரபாகரனிடமிருந்து நாட்டை விட்டுத்தப்பியோடியவரான சோமவன்ச அமர சிங்க பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மீள் குடியேற்ற அமைச்சுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹேம குமார நாணயக்கார நேற்று தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட தமிழ் மாணவியின் கைது தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜே.வி.பி, பிரபாகரனிடம் சான்றிதழ் பெற்றதற்காக அந்த மாணவி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளாரென்றால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தங்கப்பதக்கம் பெற்றதற்காகவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியது.
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews



























